கனவு13:உனக்காவது தெரியுமா??
உன்னை புகழ்ந்து
எழுதிய கவியினால்
கைவிரல்கள் ஏதோ
சொல்லத் தவிக்கிறது..!
இடமாறிய இதயம்
இதுதான் என்று சொல்லியிருக்குமோ?
”பொய் பேச தெரியாத
உன் கண்களுக்கு
கைகள் மட்டும்
எப்படி கவி எழுதவருகிறது?“
விடை தேடி
விண்ணில் பறந்தும்
தெரியவில்லையே என்பது மட்டும்
தெளிவாய் சொல்கிறது...!
உனக்காவது தெரியுமா எப்படினு??
No comments:
Post a Comment