Thursday, March 31, 2011

கனவு 1: விலைவாசி உயர்வு



அரை டம்ளர் காபிக்கு
அறுபது பைசா அன்று.
பால் ஆடை விழுந்த காபிக்கு
பைசா கொஞ்சம் அதிகம் இன்று.
-தங்கம்
காலம் பதில் சொன்னது
உன் குழந்தைக்கு
என் பெயர் வைத்துவிடு!
இல்லையெனில் நீ என்னை
அருகினில் கூட பார்க்க முடியாது என்று..
இனிவரும் காலங்களில்..
-பால்
உன் வருகைக்காக
உலகில் எத்தனை
உயிர்கள் ஏக்கம்
ஒவ்வொரு காலையிலும் மாலையிலும்.
உன் விலை அதிகரிப்பால்
பச்சிளம் குழந்தைகளின்
பசி அடங்க பல மணிநேரம்.
பச்சத் தண்ணி கொடுத்தும்
பாட்டு பாடியும்
கண் உறக்கம் இல்லாமல்
கண்ணீர் துளிகள்தான் மிச்சம்
குழந்தையை கையேந்தும் தாய்க்கு...
அத்தனையும் உயர்ந்துவிட்டது
இத்தனை வருடம் ஆகியும்
உயராதது ஒவ்வொரு ஏழைதான்....
ஏன் இந்த அவலம்
என்று தணியும் இந்த கேவலம்...!!!

Friday, March 4, 2011

கொஞ்ச நேர கனவு


உன் முகம் வரைய
மூன்று புள்ளி போதும்
ஆயுத எழுத்தாய்
பார்த்து
அழகாய் வரைந்திடுவேன்..
என்னை நினைத்து
வெளிவரும்
வௌ்ளை பருக்களுக்கு
தெரியுமா...
எனது வெளிச்சம்..!
நகங்கள் சேகரித்து
வைத்திருக்கேன்
உன் நானத்தை
சேகரிக்க முடியாதவனாய்...
ஏழு அதிசயமும் யாபகம் வந்தாலும்
அழகாய் தெரிவதில்லை
நீ எதிரே வரும்போதெல்லாம்
அதிசயம்...
பகலில் சூரியன் தெரிவதில்லை
நிலவு முகம் காட்டும்
உன் கரு வெள்ளை கண்கள்
வெளிச்சத்தின்
முன்னால்...