Sunday, August 5, 2012

கனவு 21: வெகுநாட்களுக்கு


வெகுநாட்களுக்கு பிறகு
விண்ணிலிருந்து வந்த உன்னை,
கவிதை என்று நினைத்து
ப(கு)டித்து விட்டேன்..!  ~மழை

கனவு20:மனசுக்குள்ளும்


மனசுக்குள்ளும் சில கல்லறைகள்..
~சொல்ல முடியாத வார்த்தைகள்

கனவு19:பிறந்தவீடு


பிறந்தவீடு வானமா?
புகுந்தவீடு பூமியா?
இடைப்பட்ட தூரம்
விவரிக்க முடியாத சந்தோசமா? 
~மழை!!!

கனவு18:எழுத முடியாத


"எழுத முடியாத கவிதை
கண்களுக்குள் யார் எழுதியதோ ?
படித்த கண்கள்,கண்ணீர் வடித்தும் விடுகின்றன.
சோகம் துளிர்விடும் போதெல்லாம்...!!"

கனவு 17: கடந்த காலத்தை





கடந்த காலத்தை 
ஞாபகப் படுத்தியே
பேசுமோ 
கடல் அலைகள்...!  
       ~கடற்கரை தனிமை 


கனவு16 :தனிமை என்னும்


தனிமை என்னும்
அம்மாவசை இரவில்,
அறையின் நடுவே
நிறந்தரமாக வைக்கபட்ட
பௌர்னமி நிலா...
                        ~மின்விளக்கு....   

Friday, July 22, 2011

கனவு15: மழைத்துளிகள்...


சேர்க்கப்படாத வெள்ளைப்பூக்கள்
இங்கே சிதரிக்கிடக்கின்றன.
மரஞ்செடிகளில் தங்கிய
மழைத்துளிகள்.


பாதங்கள் பட்டு
உடைந்து போகிறது.
தெருக்களில் தங்கிய
மழைத்துளிகள்.


மேனி முழுவதும்
சிலிர்த்துவிடுகிறது...
மெல்லிய காற்றோடு..!
கைகளில் தங்கிய
மழைத்துளினால்...
இவ்வளவும் எப்போதாவது
நடப்பதுண்டு.
வானத்தின் பிடியில்
இருப்பதனால்.