Friday, July 22, 2011

கனவு15: மழைத்துளிகள்...


சேர்க்கப்படாத வெள்ளைப்பூக்கள்
இங்கே சிதரிக்கிடக்கின்றன.
மரஞ்செடிகளில் தங்கிய
மழைத்துளிகள்.


பாதங்கள் பட்டு
உடைந்து போகிறது.
தெருக்களில் தங்கிய
மழைத்துளிகள்.


மேனி முழுவதும்
சிலிர்த்துவிடுகிறது...
மெல்லிய காற்றோடு..!
கைகளில் தங்கிய
மழைத்துளினால்...
இவ்வளவும் எப்போதாவது
நடப்பதுண்டு.
வானத்தின் பிடியில்
இருப்பதனால்.



No comments:

Post a Comment