Friday, March 4, 2011

கொஞ்ச நேர கனவு


உன் முகம் வரைய
மூன்று புள்ளி போதும்
ஆயுத எழுத்தாய்
பார்த்து
அழகாய் வரைந்திடுவேன்..
என்னை நினைத்து
வெளிவரும்
வௌ்ளை பருக்களுக்கு
தெரியுமா...
எனது வெளிச்சம்..!
நகங்கள் சேகரித்து
வைத்திருக்கேன்
உன் நானத்தை
சேகரிக்க முடியாதவனாய்...
ஏழு அதிசயமும் யாபகம் வந்தாலும்
அழகாய் தெரிவதில்லை
நீ எதிரே வரும்போதெல்லாம்
அதிசயம்...
பகலில் சூரியன் தெரிவதில்லை
நிலவு முகம் காட்டும்
உன் கரு வெள்ளை கண்கள்
வெளிச்சத்தின்
முன்னால்...

No comments:

Post a Comment